×

குளித்தலை வைகை நல்லூர் பெருமாள் கோயிலில் 6 கிரக சேர்க்கைக்கான சிறப்பு பரிகார பூஜை

குளித்தலை, டிச. 24: கரூர் மாவட்டம் குளித்தலை வைகை நல்லூர் அக்ரஹாரத்தில் உள்ளது லட்சுமி நாராயண பெருமாள் கோயில். இக்கோயிலில் நாளை(25ம் தேதி) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பல வருடங்களுக்குப்பிறகு தனுசு ராசியில் சனி, சூரியன், கேது, சந்திரன், செவ்வாய் சுக்கிரன் உள்ளிட்ட 6 கிரகங்களும் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதால் அந்த கிரக சஞ்சாரத்தின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடைபெறும் சிறப்பு பூஜை ஹோமத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kulaththalai Vaigai Nallur Perumal Temple ,
× RELATED சின்னதாராபுரம் அருகே மது விற்ற 2 பேர் கைது